தவறான ஊசி போட்டதால் இளம் பெண் மரணம் – சென்னை

சென்னை பல்லாவரம் அருகே அனகாபுத்தூரை சேர்ந்தவர் நித்யா. பட்டதாரியான இவர் வேலை தேடி வந்துள்ளார். நித்யாவுக்கு இருமல் பிரச்னை இருந்ததால், அவரது பெற்றோர் அதே பகுதியில் உள்ள ஜெயம் என்ற கிளினிக் நடத்திவரும் பெண் மருத்துவர் சுஜாதா கருணாகரன், நித்யாவின் கையில் ஊசி போட்ட சில நிமிடங்களில் அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் நித்யாவை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு நித்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் அரைமணிநேரத்திற்கு முன்பே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதைக்கேட்ட நித்யாவின் பெற்றோர்க தான் தவறான ஊசி போட்டதால் தங்கள் மகள் இறந்துவிட்டதாக சங்கர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்த போலீசார் நித்யாவின் மரணம் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.