தூத்துக்குடி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக 28 நாட்கள் புதிதாக எந்த தொற்றும் இல்லாத நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம், பேட்மாநகரம், கேம்பலாபாத், செய்துங்கநல்லூர், ஆத்தூர், அய்யனாரூத்து, தூத்துக்குடி, தங்கம்மாள்புரம், பசுவந்தனை ஆகிய 9 பகுதிகளை சேர்ந்த 27 பேர் கரோனா வைரசின் தாக்கத்துக்கு ஆளானார்கள். அதில் 25 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் இறந்துள்ளார் மேலும் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானா தாக்கம் அதிகம் உள்ள பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டது. தற்போது அந்த பகுதிகளில் தொடர்ச்சியாக 28 நாட்கள் புதிதாக எந்த தொற்றும் இல்லாத நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் 28 நாட்கள் முடிவடைந்த பின்பு, அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது. ஒரு மண்டலத்தில் 28 நாட்கள் முடிவடைந்து உள்ளது. 3 மண்டலங்களில் விரைவில் 28 நாட்கள் கண்காணிப்பு முடிவடைய உள்ளது. அந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படும். மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் உள்ளது போன்ற கட்டுப்பாடுகள் மட்டுமே அந்த பகுதிகளிலும் இருக்கும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.