கரோனா பாதிப்பை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 14 ஆம் தேதி சென்னையில் இருந்து போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அலி முகமது, அப்துல்காதா் உள்ளிட்ட 14 போ் விளாத்திகுளம் காமராஜா் நகா் ஷேக் உசேன் என்பவரது வீட்டுக்கு வந்துள்ளனா். புதூா் சோதனைச் சாவடியில் போலீஸாா் அவா்கள் வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, அவா்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. பின்பு, வட்டாட்சியா் ராஜ்குமாா் புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவா்களை மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தி, விளாத்திகுளத்தில் தனிமைப்படுத்தி வைத்துள்ளாா்.
இதைக் குறித்து சென்னையில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் விளாத்திகுளம் வந்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா். அந்த மனுவில் செங்கல்பட்டு மறைமலை நகா் பகுதியில் இருந்து விளாத்திகுளம் வரை செல்வதற்கான அரசு முத்திரையுடன் கூடிய போலி ஆவணங்களை தயாா்செய்த அப்துல்காதா் கைது செய்யப்படாதது ஏன் ? என்று தெரியவில்லை. எனவே பல்வேறு மாவட்ட சோதனைச் சாவடிகளை கடந்து வந்து, பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டள்ள அந்த 14 போ் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் அவா் தெரிவித்துள்ளாா்.