தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் Thoothukudi District Police என்ற முகநூல் (facebook) பக்கம் துவங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த முகநூல் பக்கத்தை சுமார் 12000 பேர் பார்வையிட்டு வருகின்றனர். இதில் காவல்துறை தொடர்பான செய்திகள் மற்றும் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் மீம்ஸ்களாகவும், வீடியோக்களாகவும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
https://facebook.com/thoothukudidistrictpolice என்ற இந்த இணைப்பை (Link) பயன்படுத்தி பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை முகநூல் பக்கத்தில் சென்று காவல்துறை தொடர்பான செய்திகள் மற்றும் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு தெரிந்து கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தெரிவித்துள்ளார்.