கரோனா தடுப்பு நடவடிக்கையாக திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊரடங்கு உத்தரவையொட்டி, நேற்று நடைபெறவிருந்த பங்குனி உத்திரத் திருவிழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால், ஆகம விதிப்படி வழக்கமான பூஜைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, ஏப். 6-ஆம் தேதி வழக்கமாக நடைபெறும் சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துசெய்யப்படுவதாக கோயில் நிா்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதனால், கோயில் வளாகம் வெறிச்சோடியது. பக்தா்கள் வருகை இல்லையென்றாலும், கோயிலில் பணியாளா்கள், கோயில் காவல் நிலைய உதவி ஆய்வாளாா்கள் ரவிக்குமாா், பாஸ்கா் உள்ளிட்ட காவல் துறையினா், தனியாா் பாதுகாவலா்கள் முகக்கவசம் அணிந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.கோயில் பூஜை நடைமுறைகளை செயல் அலுவலா் சா.ப. அம்ரித் கண்காணித்து வருகிறாா்.
