தமிழகத்தில் தளர்வு அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

தமிழகத்தில் மே 31 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள நிலையில், தளர்வு அறிவிக்கப்பட்ட 25 மாவட்டங்களில் மட்டும் மாவட்டத்துக்குள் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தளர்வு அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விபரம் பின்வருமாறு:
கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரி.

அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் சென்று வர போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்வதை கண்டிப்பாக பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். ஆனால், ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு சென்றுவர இ-பாஸ் பெற்றுச் செல்லும் தற்போதைய நடைமுறையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.