மீண்டும் நீட் ஆள்மாறாட்டம்..? – தொடரும் புகார்கள்..

தேனியை தொடர்ந்து கோவையிலும் மோசடி புகார்.
‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில், ஒரு மாணவி, ஒரு மாணவன் சேர்ந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு, சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரி புகார் கடிதம் அளித்துள்ளது.
‘நீட்’ நுழைவுத்தேர்வு புகைப்படத்திற்கும், அனுமதி கடித புகைப்படத்திற்கும் வேறுபாடு உள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘நீட்’ நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து, தேனி அரசு மருத்துவ கல்லுாரியில் சேர்ந்த உதித் சூர்யா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது எழுப்பப்பட்டுள்ள இந்த புகார், மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.