இன்று முதல் ஜனவரி 1ம் தேதி வரை சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் இசை விழா நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள பல்வேறு இசைக் கலைஞர்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு இசை விருந்து அளிக்க உள்ளதால் பொதுமக்கள் இசை விழாவில் பங்கேற்று இந்த விழாவினை மிகப்பெரிய வெற்றி விழாவாக்க வேண்டும் என சி.எம்.ஆர்.எல். நிர்வாக பொதுமக்கள் தொடர்பு அதிகாரி ஷ்ருதி ரவீந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
