தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடை, பாதுகாப்பு சாதனங்கள் வழங்கினார்: அமைச்சர் கடம்பூர் செ.ராஜு

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜு அவர்கள் நடமாடும் காய்கறி அங்காடி வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும் நிகழ்ச்சியில் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடை பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் அரிசி பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினார்.

அருகில் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி சண்முகநாதன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.தனபிரியா, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் திரு.மோகன், மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் திரு.சுதாகர், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்), திரு.குற்றாலிங்கம் மற்றும் முக்கிய பிரமுகர் ஆறுமுக நாயனார் அரசு அலுவலர்கள் உள்ளனர்.