கொரோனா தொற்று சிகிச்சை பெற்று குணமடைந்த கோவில்பட்டி பகுதியைச் சார்ந்த 4 பேர் இன்று மதியம் வீடு திரும்பினர். கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களை, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி உறைவிட மருத்துவர் பழங்களை கொடுத்து, 14 நாள்கள் வீடுகளில் தனிமையாக இருக்கும்படி அறிவுறுத்தி அவர்களை வழியனுப்பி வைத்தார்.
