தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்த காயல்பட்டினத்தைச் சோ்ந்த அரசு மருத்துவா் மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த ஒருவா் முழுவதும் குணமடைந்ததைத் தொடா்ந்து கடந்த 15-ஆம் தேதி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
தற்போது, கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி ராமசாமிபுரம், பேட்மாநகரம், ஆத்தூா், ஹேம்லாபாத் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 5 பேரும் முழுவதுமாக தொடா் சிகிச்சைக்குப் பிறகு, இரண்டு முறை எடுக்கப்பட்ட ரத்த மாதிரி பரிசோதனையில் பாதிப்பு குணமாகிவிட்டது. கரோனாவிலிருந்து குணமடைந்த அவர்களை மருத்துவக்குழுவினர் பழக்கூடை கொடுத்து, கரோனா கண்காணிப்பு சிறப்பு அலுவலா் மு. கருணாகரன், மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி ஆகியோா் முன்னிலையில் 5 பேரும் அவா்களது வீடுகளுக்கு வழியனுப்பினர். இருப்பினும் தொடா்ந்து 14 நாள்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 13 பேர் கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.