வீ ஆர் யுவர் வாய்ஸ் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், வ. உ. சிதம்பரம் கல்லூரி
இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற
ஏப்ரல் மாதம் 26ம் தேதி தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் நடைபெறுகின்றன.
கடந்த 5 வருடமாக நடைபெறும் வீ ஆர் யுவர் வாய்ஸ் வேலை வாய்ப்பு முகாமின் 12வது
நிகழ்வாகும். இதில் 10,12, தொழிற்படிப்பு (ITI), பட்டப்படிப்பு (Degree) படித்த கை / கால்
பாதிக்கப்பட்ட, காது கேட்காத / வாய் பேச இயலாத / குறைந்த கண் பார்வை உள்ள
மாற்றுத்திறனாளிகள் பங்கு பெறலாம்.
மேலும் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளும் பங்கு பெறலாம்.

http://www.weareyourvoice.org
முன்பதிவு அவசியம்
இம்முகாமில் பங்கேற்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள், நிறுவனங்கள் மற்றும்
தன்னார்வலர்கள் தொடர்புக்கு www.weareyourvoice.org & 75575 50888 , 75575 50999.
சிறப்பு அம்சங்கள்
- இதில் பங்கு பெற எந்த கட்டணமும் கிடையாது.
- நுற்றுக்கணக்கான நிறுவனங்களை ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு.
- சுயதொழில் மற்றும் கடன் உதவிகள் சார்ந்த விளக்கங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
- மத்திய, மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தும் பல்வேறு
நலத்திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். - பல்வேறு தொண்டு நிறுவனங்களையும், அவர்களது சேவைகளை பற்றியும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு.