தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள விளாங்குடி கிராத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவருக்கு அனுசியா (17) உள்பட 3 பிள்ளைகள் உண்டு. இதில் அனுசியா பிளஸ்-2 படித்து வருகிறார். கணவர் இறந்துவிட்டதால் கூலி வேலை செய்து மகள்களை படிக்க வைத்தார் மகேஸ்வரி. இந்த நிலையில் அனுசியாவுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (26) என்பவருக்கு இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி செல்போனிலும் நேரிலும் சந்தித்து வந்தனர். இதனை அறிந்த தாய் அனுசியவை கண்டித்துள்ளார். ஆனாலும் அதனை கேட்காத அனுசியா காதலை கைவிடவில்லை. பின்பு ஒரு கட்டத்தில் தாயின் தொந்தரவு தாங்காத அனுசியா இது குறித்து காதலனிடம் கூறியுள்ளார். அதற்கு ஆனந்தராஜ், உன் அம்மா இருக்கும் வரை நமது காதலை ஏற்றுக் கொள்ள மாட்டார். எனவே அவரை தீர்த்து கட்டிவிடலாம் என கூறியதாக தெரிகிறது..
இந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்பு இரவு தாய்க்கும், மகளுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அனுசியா இரும்பு கம்பியால் தனது தாய் மகேஸ்வரியை சரமாரியாக அடித்துள்ளதார். இதில் மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தர். தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுசியா மற்றும் ஆனந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
