கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை ஆய்வு : அமைச்சர் கடம்பூர் செ.ராஜு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் தீயணைப்பு வாகனம், கிருமிநாசினி தெளிக்கும் பணிகளையும் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு அவர்கள் பார்வையிட்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் பாலகோபாலன் இ.கா.ப. அவர்கள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் மாவட்ட ஊராட்சித் தலைவர் திருமதி.ஆர்.சத்யா மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் திரு.பி மோகன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.