தூத்துக்குடியில் வணிக வளாகங்களை மூட உத்தரவு : பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்க அறிவுறுத்தல்

தூத்துக்குடி நகரில் உள்ள லாட்ஜ்களில் தங்கியுள்ள வெளி மாநில, வெளிநாட்டினர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தூத்துக்குடி நகரில் உள்ள டிஎஸ்எப் பிளாசா, வேலவன் ஹைபர் மார்க்கெட், பெரிசன் பிளாசா ஆகிய வணிக வளாகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை காவல்துறை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருமண மண்டபங்களில் வருகிற 31ம் தேதி வரையில், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் மட்டுமே நடத்த அனுமதி அளிக்கபட்டுள்ளது. புதிதாக திருணங்கள் புக் செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. திருமண விழா நடைபெற்ற பின்னரும், நடைபெறும் முன்னரும் கிரிமி நாசினி தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், ஆம்னி பஸ்களில் ளில் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில தெளிக்கப்பட்டு வருகிறது. கோயில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களில் வழிபாடு நடக்கும் முன்னரும் பின்னரும் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பொதுஇடங்களில் கூடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் மாநகர் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் கூடும் 10 இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.