மத்திய அரசு 15.04.20 அன்று வெளியிட்ட ஆணையின் படி 20.04.20 க்கு பிறகு எந்தெந்த புதிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பதை மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதற்கென மாநில அரசு ஒரு வல்லுநர் குழுவை நியமித்துள்ளது. அந்த குழு, தன் முதற்கட்ட கூட்டத்தினை நடத்தி அதனுடைய முதற்கட்ட ஆலோசனைகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் 20.04.20 அன்று தெரிவிக்க உள்ளது. இந்தக் குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முடிவெடுக்க உள்ளார்கள். எனவே இதுகுறித்து தமிழ்நாடு அரசின் ஆணைகள் வெளியிடும் வரை தற்போதுள்ள கட்டுப்பாட்டுக்குள் தொடர்ந்து நீடிக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
