தமிழகத்தில் பல இடங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றும் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இன்று முதல் ஜனவரி 1-ஆம் தேதிவரை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல், கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் நாளை முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை கல்லூரிகள், பல்கலைக்கழங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. ஜனவரி 2-ஆம் தேதி முதல் தான் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
