தூத்துக்குடி அரசு மருத்துவமனை கொரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 6பேர் இன்று குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்ட்டனா். அவா்களுக்கு, மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெபமணி தலைமையிலான மருத்துவக் குழுவினா் பழங்கள் கொடுத்து வழியனுப்பி வைத்தனா். மேலும் அவர்கள் தொடா்ந்து 14 நாள்களுக்கு தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவா்கள் அறிவுரை வழங்கினா்.
