கொரோனா பாதிப்பிலிருந்து 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்: தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டிலில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இன்று மதியம் குணமடைந்து வீட்டிற்கு திரும்பினார்கள்.

இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 3 நபர்கள் நோயிலிருந்து முற்றிலும் குணமாகி அவர்கள் தங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் அவர்கள் தலைமையில் மருவத்துறை மற்றும் உறைவிடம் மருத்துவர் பங்கேற்று வழி அனுப்பி வைத்தார்கள் இவர்கள் 14 நாட்கள் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு வீட்டிலேயே இருக்க அறிவுறுத்த பட்டார்கள்.

தற்போது மதியம் 2 மணி நிலவரப்படி 95 நபர்கள் கொரோனா நோய் தொற்றுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்