சென்னை தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ஆயிரம்விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில் முறையாக உரிமம் பெறாத, தொழில் வரி செலுத்தாத 20 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று திடீரென சீல் வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
