காவல்துறை அறிவிப்பு : தூத்துக்குடி

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டுக்கு ஒருவர் பொது இடங்களில் வரும்போது முக கவசம் அணியுமாறும், சமூக விலகலை கடைபிடிக்குமாறும் காவல்துறையினர் பலமுறை கூறிவரும் நிலையில் 27.04.2020 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை பொருட்படுத்தாமல் சாலையில் அலட்சியமாக சுற்றித்திரிந்தவர்கள் மீது 146 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 167 நபர்களை கைது செய்து, 86 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 3489 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4077 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். மேலும் அவர்கள் பயன்படுத்திய 1924 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.