ஈரோடு மாவட்டம் ஒத்தக்குதிரை மற்றும் தாசம்பாளையம் பகுதிக்கு இடையே சாலையில் சென்று கொண்டிருந்த குடும்பத்தினர் மீது எதிரே வந்த வாகனம் மோதியது இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர், அப்போது அந்த வழியாக வந்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன், விபத்தில் சிக்கிய குடும்பத்தினருக்கு உடனடியாக முதலுதவி அளித்து தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களை தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய குடும்பத்தினருக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடுகளை செய்தார். இதனைக் கண்ட பொதுமக்கள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவித்தனர்.
