ஐ.நா வில் பேச போகும் முதல் தமிழக அரசு பள்ளி மாணவி- குவியும் பாராட்டு

மதுரை மாவட்டம் இளமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேமலதா. இவர் தனது ஊரில் உள்ள ஆதிதிராவிடர்
மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்திருக்கிறார். பள்ளியில் எட்டாம் வைகுப்பு படித்துக்கொண்டிருக்கும்
போது இவர் மனித உரிமை கல்வியைப் பயின்றுள்ளார். தற்சமயம் கல்லூரியில் பயின்று வரும் நிலையில் அவருக்கு ஐநா மனித உரிமை ஆணையம் சார்பாக உரை நிகழ்த்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது….அக்டோபர் 1 மற்றும் 2ம் தேதிகளில் ஜெனிவாவில் நடைபெற இருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள அழைப்பு வந்திருக்கிறது. அந்த கூட்டத்தில் ‘மனித உரிமை கல்வி மூலம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் பிரேமலதா உரையாற்றவிருக்கிறார்.இதை அடுத்து பல்வேறு தரப்பில் இருந்தும் மாணவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதனால் மாணவி பிரேமலதா உற்சாகம் அடைந்து உள்ளார்.