தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் அமைந்துள்ள 110கிவோ நகர் துணை மின் நிலையத்தில் உயர்அழுத்த காற்றுத் திறப்பானில் தவிர்க்க முடியாத பழுதுநீக்கும் பணி நாளை (25.08.2020) நடைபெற உள்ளது.
எனவே, தூத்துக்குடி போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1 ஆம் ரயில்வே கேட், 2 ஆம் ரயில்வே கேட், மட்டக்கடை, பீச்ரோடு , ரோச் காலனி இனிகோ நகர் எட்டையாபுரம் ரோடு, தெப்பகுளம், சிவன்கோயில் தெரு, டபுள்யூ.ஜி.சி. ரோடு சந்தை ரோடு ஜார்ஜ் ரோடு, சண்முகபுரம் வி.இ. ரோடு, பால விநாயகர் கோயில் தெரு அண்ணா நகர் டூவிபுரம் மீனாட்சிபுரம் தாமோதரநகர் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 08.30மணி முதல் 09.30 மணி வரையிலும் மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் / விநியோகம் /நகர் / தூத்துக்குடி அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.