தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் இன்று 50 நோயாளிகள் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்கள்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று 50 நோயாளிகள் நோய்த் தொற்றில் இருந்து விடுபட்டு தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இன்று இதுவரை அதாவது ஏழு முப்பது மணி வரை 40 நோயாளிகள் உள்நோயாளிகளாக சேர்ந்துள்ளார்கள், மொத்தம் 343 நபர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.